அண்மைய செய்திகள்

recent
-

80 இலட்சம் ரூபாய் பணத்துடன் பெண் ஒருவர் கைது

8,031,000 ரூபாய் பணப் பையுடன் பெண்ணொருவர் பெல்மடுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பணம் கிடைத்த முறை தொடர்பில் அவரிடம் வினவிய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை குறித்த பெண் வழங்கியுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 ஓப்பநாயக்க பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பெல்மடுல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

80 இலட்சம் ரூபாய் பணத்துடன் பெண் ஒருவர் கைது Reviewed by Author on March 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.