அண்மைய செய்திகள்

-

காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியது

திருகோணமலை-நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (13) மாலை கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு காணாமல் போனவர் யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச த்தில் உள்ள குப்பிளான் பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திர ராசா சிந்துஜன் (21 வயது) எனவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

 சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோமலை நோக்கி 7 பேர் கொண்ட குழுவினர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்து ஆலய வழிபாடுகளை முடித்து விட்டு நிலாவெளி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் வழியில் நிலாவெளி கடலில் குளிப்பதற்காக சென்ற போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் ஒருவருடைய சடலம் வெள்ளிக்கிழமை(12) மீற்கப்பட்டது. 

 இந்நிலையில் மற்ற இளைஞருடைய சடலம் தேடப்பட்டு வந்த நிலையில் இவருடைய சடலம் சனிக்கிழமை 13ஆம் தேதி மாலை கரையொதுங்கி உள்ளதாகவும் இவரது சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியது Reviewed by Author on March 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.