அண்மைய செய்திகள்

recent
-

இளம் முயற்சியாளர்களுக்கு காணி அலகுகளை வழங்க தீர்மானம்

நாட்டில் 20,000 இளம் முயற்சியாளர்களுக்காக இந்த வருடத்தில் காணி அலகுகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது இளம் முயற்சியாளர்களுக்காக ஒரு இலட்சம் காணி அலகுகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் என காணி அமைச்சின் செயலாளர் R.A.A.K. ரணவக்க தெரிவித்தார். காணி அலகுகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் 435,000 இளம் முயற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். 

 இவர்களில் தெரிவுசெய்யப்பட்ட முயற்சியாளர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இந்நாட்களில் இடம்பெறுவதுடன், அவை எதிர்வரும் 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளன. விவசாயம், கால்நடை வளர்ப்பு, நுண் தொழில் முயற்சி மற்றும் தேசிய உற்பத்திகள் உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு காணிகளை வழங்குவதே அரசின் நோக்கமாகும். இதற்கிணங்க, எதிர்வரும் ஜுன் மாதம் முதல் காணிகளை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் R.A.A.K. ரணவக்க குறிப்பிட்டார்.

இளம் முயற்சியாளர்களுக்கு காணி அலகுகளை வழங்க தீர்மானம் Reviewed by Author on March 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.