அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் மூன்று மாத கால ஊடக கற்கை நெறி அங்குரார்பண நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான ஊடக பயிற்சியை வழங்கும் முகமாக மன்னார் கலையருவி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மூன்று மாத கால ஊடக பயிற்சி வகுப்புக்கள் வைபவ ரீதியாக கலையருவி இயக்குனரும் மற்றும் மன்னா பத்திரிக்கை ஆசிரியருமான அருட்பணி.அ.லக்ஸ்ரன் டி சில்வா அடிகளார் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

 ஊடக துறை சார்ந்த அடிப்படை பயிற்சிகளை கொண்ட குறித்த குறுங்கால கற்கை நெறியானது மூன்று மாத கால எல்லையை கொண்டதுடன் பயிற்சியின் பின்னர் பெறுமதி வாய்ந்த சான்றிதல் வழங்கப்பட்டு சிறப்பான முறையில் தகுதி பெறுகின்ற மாணவர்களுக்கு ஊடக துறை டிப்ளோ தர வகுப்புக்களுக்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது

 குறித்த ஆரம்ப நிகழ்வில் யாழ் பல்கலைகழக விரிவுரையாளர் திரு.S.டினேஸ் கொடுதோர் மன்னார் உயர் தொழில் நுட்பகல்லூரி பணிப்பாளர் திரு.சு.து.மோகன் குரூஸ் ,திரு .S.ஜேசுதாசன்(MA in journalism) ஊடகவியளாலர் ஜோசப் நயன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஊடக பயிற்சி வகுப்புக்களை நடாத்தவுள்ளமை குறிப்பிடதக்கது.

மன்னார் மாவட்டத்தில் மூன்று மாத கால ஊடக கற்கை நெறி அங்குரார்பண நிகழ்வு Reviewed by Author on March 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.