இலங்கை படகில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள்; இந்திய கடலோர காவல் படை பறிமுதல்
விமானம் ஒன்றின் உதவியுடன் அந்த பகுதியை சுற்றியுள்ள இடங்களில் தேடுதல் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டது.
இதில், இலங்கையை சேர்ந்த 3 படகுகள் தடுத்தி நிறுத்தி சோதனையிடப்பட்டன. அவற்றில், ஒரு படகில் இருந்து 300 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள், 5 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து சோதனை செய்யப்பட்ட 3 படகுகள், படகில் இருந்த 19 ஊழியர்கள் கேரளாவுக்கு கூட்டு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
இலங்கை படகில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள்; இந்திய கடலோர காவல் படை பறிமுதல்
Reviewed by Author
on
March 26, 2021
Rating:

No comments:
Post a Comment