அல்வாய் கொலை சம்பவம் தொடர்பில் நால்வர் கைது!
அல்வாய் வடக்கு முத்துமாரி அம்மன் கோவிலடியில் உறவினர்களுக்கு இடையில் காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை வாய் தர்க்கமாக ஆரம்பித்து வாள் வெட்டில் முடிந்தது.
சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 6 பேர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
சிகிச்சை பெற்றவர்களில் இருவர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதாகவும் மேலும் இருவர் கொல்லப்பட்டவருடன் மோதலில் ஈடுபட்டவர்கள் எனவும் பருத்தித்துறை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்
அல்வாய் கொலை சம்பவம் தொடர்பில் நால்வர் கைது!
Reviewed by Author
on
April 22, 2021
Rating:

No comments:
Post a Comment