அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பந்தைய புறாக்கள் கழகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு.

மன்னார் மாவட்ட பந்தைய புறாக்கள் கழகத்தின் ஏற்பாட்டில் (MANNAR RACING PIGEON ASSOCIATION ) ஏற்பாடு செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது போட்டியானது கடந்த மாதம் இடம் பெற்ற நிலையில் குறித்த போட்டிக்கான பரிசலிப்பு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(18) மாலை 5.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. 

 குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் சமூக சேவையாளர் டக்ஸன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன் போது முதல் 1ஆம் இடத்தை பெற்ற போட்டியாளருக்கு 20 ஆயிரம் ரூபாவும், 2ஆம் இடத்தை பெற்ற போட்டியாளருக்கு 15 ஆயிரம் ரூபாவும், 3ஆம் இடத்தை பெற்ற போட்டியாளருக்கு 10 ஆயிரம் ரூபாவும் பணப்பரிசு வழங்கப்பட்டதோடு, போட்டியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணம் மன்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.









மன்னார் மாவட்ட பந்தைய புறாக்கள் கழகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு. Reviewed by Author on April 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.