அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா மரணங்கள் 575 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு 14 -ஐ சேர்ந்த 90 வயதான ஆணொருவரும் புவக்பிட்டி பகுதியை சேர்ந்த 87 வயதான ஆணொருவரும் ஹோமாகம பகுதியை சேர்ந்த 67 வயதான ஆணொருவரும் இக்கிரிய பகுதியை சேர்ந்த 86 வயதான பெண்ணொருவருமே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 

 அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனிடையே, நாட்டில் 93,128 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 89,701 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 2 ,852 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா மரணங்கள் 575 ஆக அதிகரிப்பு Reviewed by Author on April 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.