அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாழ்வுபாடு கடற்கரையை அண்மித்த கடற்கரை பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு.

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள தாழ்வுபாடு கடற்கரையை அண்மித்த கடற்கரை பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்றை நேற்று (24) திங்கட்கிழமை மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை (24) மாலை குறித்த கடற்கரை பகுதிக்குச் சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டனர். 

 இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை குறித்த பகுதிக்குச் சென்ற சட்ட வைத்திய அதிகாரி சடலத்தை பார்வையிட்டதோடு,சடலத்தை உடற்கூற்று பரிசோதனையை மேற்கொள்ள மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் இவது வரை அடையாளம் காணப்படவில்லை.
                 















மன்னார் தாழ்வுபாடு கடற்கரையை அண்மித்த கடற்கரை பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு. Reviewed by Author on May 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.