அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பொலிஸாருக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுப்பு

நாடளாவிய ரீதியில் பயணதடை முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் சுகாதர நிலைமைகளை கருத்தில் கொண்டு மன்னார் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸாருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று காலை 9.00 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஒழுங்கமைப்பில் கடந்த மாதம் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 51 பொலிஸாருக்கு இன்றைய தினம் இரண்டவது கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

 கொரோனா பரவல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் இம்மாதம் மாத்திரம் 82 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோன பரவல் அதிகளவு பரவி வருகின்ற நிலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.




மன்னாரில் பொலிஸாருக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுப்பு Reviewed by Author on May 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.