அண்மைய செய்திகள்

recent
-

புற்றுநோய் தேங்காய் எண்ணெய் தற்போது நாட்டில் இல்லை

புற்றுநோயை ( Aflotoxin) ஏற்படுத்தக்கூடியது என்று கடந்த காலப்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அனைத்தும் மீள ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

 பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் பாராளுமன்றத்தில் கேட்ட வாய் மூலமான கேள்விக்கு பதில் அளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். புற்றுநோயை உண்டாக்கும், இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் எதுவும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதை சுங்கப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


புற்றுநோய் தேங்காய் எண்ணெய் தற்போது நாட்டில் இல்லை Reviewed by Author on May 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.