அண்மைய செய்திகள்

recent
-

'செல்பி' மோகம்; மாணவன் பலி

 வாணியம்பாடி அருகே, 120 அடி ஆழ கிணற்றில், டிராக்டருடன் விழுந்த மாணவன் பலியானார். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே, சின்னமோட்டூரைச் சேர்ந்தவர் சஞ்சீவி, 19; சென்னையில் தனியார் கல்லுாரியில் கேட்டரிங் முதலாமாண்டு படித்தார். கொரோனாவால் கல்லுாரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், வீட்டில் இருந்தார். வீட்டுக்கு அருகில் வசிப்பவர் ராஜேந்திரன். விவசாயியான இவருக்கு டிராக்டர் உள்ளது. 

 நேற்று மதியம், 1:00 மணிக்கு வீட்டு முன், 120 அடி ஆழ கிணற்றுக்கு அருகில், டிராக்டரை சாவியோடு நிறுத்தியிருந்தார். சஞ்சீவி டிராக்டரில் உட்கார்ந்து, மொபைல் போனில், 'செல்பி' எடுத்தார்.திடீரென ஓட்டிப் பார்க்கும் ஆசையில், டிராக்டரை இயக்கினார். எதிர்பாராத விதமாக, கிணற்றில் டிராக்டர் சரிந்து விழுந்தது. இதில் தண்ணீரில் மூழ்கி, சஞ்சீவி பலியானார். தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டனர்.

'செல்பி' மோகம்; மாணவன் பலி Reviewed by Author on May 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.