மன்னாரில் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர் மேலும் ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(6) கருத்து தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் நேற்று சனிக்கிழமை (5) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தற்போது வரை 522 கொரோனா தொற்றாளர்களும்,இந்த வருடம் 505 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் தற்போது வரை 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி நானாட்டான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 383 பீ.சி. ஆர். பரிசோதனைகளின் போது மன்னார், அரிப்பு,சாந்திபுரம், வவுனியா,யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 132 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் 787 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Reviewed by Author
on
June 06, 2021
Rating:

No comments:
Post a Comment