அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார நடைமுறைகளையும் மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக அமையும் – அதிகாரிகள் எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. ஆனால் சிலர் நாட்டின் சட்ட திட்டங்களையும் சுகாதார நடைமுறைகளையும் மீறிச்செயற்படுவதானது சமூகத்திற்கு ஆபத்தானதாக அமைகின்றது என சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர். 

 மட்டக்களப்பில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் பயணக் கட்டுப்பாட்டை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் அதனை மீறும் வகையில் சிலர் செயற்படுவதை காணமுடிகின்றது. மட்டக்களப்பு நகர் போன்ற பகுதிகளில் பயணத் தடை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டாலும் புறநகர் பகுதிகளில் பயணத்தடையினை மீறியை வகையில் சிலர் செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது. 

 பொலிஸாரும் இராணுவத்தினரும் பயணத் தடைகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும் அதனையும் மீறும் வகையில் சிலர் செயற்பாடுகள் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

சுகாதார நடைமுறைகளையும் மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக அமையும் – அதிகாரிகள் எச்சரிக்கை Reviewed by Author on June 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.