அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம்

சுகாதார தொழிற்சங்கத்தின் ஒன்றியம் மற்றும் மன்னார் சுகாதார உத்தியோகஸ்தர்கள் இனனைந்து 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்கிழமை மதியம் 12 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலை வளாகத்தினுல் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் கொவிட்-19 தொற்று நோய் தொடர்பான முடிவெடுத்தலில் ஒருங்கிணைந்த தொழிற்சங்க குழுவையும் இணைத்தல்.

   வைத்திய சாலை பணிக்குழுவினருக்கு தங்குதடையின்றி பொதியளவு சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் வைத்திய சாலையில் உள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைத்துகொள்ளவேண்டும் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு அமைய கர்பிணி சுகாதாரதுறைசார் ஊழியர்களுக்கு விசேட விடுமுறைக்கான சுற்று நிருபம் வெளியிடப்படவேண்டும்.

 பயணதடை காலத்தில் சுகாதாரதுறை சார் பணிக்குழுவினருக்கு விசேட போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும அணைத்து பணிகுழு வெற்றிடங்களையும் நிறப்ப வேண்டும் கொவிட் தடுப்பூசி இதுவரை ஏற்றாத பணிகுழுவினருக்கு உடனடியாக ஏற்ற வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கையை முன்னிருத்தி ஒரு மணி நேர அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் குறித்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படாது விடத்து விரைவில் நாடளாவிய ரீதியில் பணிப்புரக்கணிப்பு மேற்கொள்ளவுள்ளதாக போரட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.






மன்னாரில் சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் Reviewed by Author on June 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.