வௌிநாட்டு பயணிகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்களில் திருத்தம்
புதிய வழிகாட்டுதல்களின் படி, பயணத் தடை இல்லாத நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் முதல் பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாவிட்டால் தனிமைப்படுத்தப்படாமல் நாட்டிற்குள் பிரவேசிக்க வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், 2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கான பயணத் தடை நடைமுறையில் உள்ள நிலையில் வியட்நாம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கையர்கள் அரசாங்கத்தின் அனுமதியுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும் என்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வௌிநாட்டு பயணிகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்களில் திருத்தம்
Reviewed by Author
on
July 16, 2021
Rating:
Reviewed by Author
on
July 16, 2021
Rating:


No comments:
Post a Comment