அண்மைய செய்திகள்

recent
-

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இணையக் கற்பித்தலிலிருந்து விலகத் தீர்மானம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக விரிவுரை யாளர்கள் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அதன் படி இணையக் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகி இன்றைய தினம் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

 கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட் டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள் ளார். குறித்த சட்ட மூலத்தின் ஊடாக சுதந்திர கல்வி தனியார் மயப்படுத்தலுக்கு உட்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம் தொடர்பில் இதுவ ரையில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்பட வில்லை என இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இணையக் கற்பித்தலிலிருந்து விலகத் தீர்மானம் Reviewed by Author on July 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.