அண்மைய செய்திகள்

recent
-

வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் மன்னார் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு!

வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றது. நாடாளாவிய ரீதியில் நேற்று (10) ஆந் திகதி காலை 10 மணிக்கு தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான அங்குரார்ப்பன நிகழ்வானது மன்னார் மாவட்ட தென்னை பயிற்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் உதயசந்திரன் அவர்களின் தலைமையில் முசலி மருதமடு கிராமத்தில் அமைந்துள்ள இக்ரா பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. 

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரருமான காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் முசலி பிரதேச செயலாளர் திரு. ரஜூவ், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. மஹேஸ்வரன், விவசாய பணிப்பாளர் திருமதி . ஷகீலா பானு மன்னார் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் ஜனாப். அலியார் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

















வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் மன்னார் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு! Reviewed by Author on July 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.