அண்மைய செய்திகள்

recent
-

2 ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு!

2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் பிரதேச செயலாளர் மட்டத்தில் அதனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. 

 இதுதொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இதுவரையில் 5 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்காக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு! Reviewed by Author on August 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.