போதையில் பெற்றோலை உடலில் ஊற்றிய குடும்பஸ்தர் தீயில் எரிந்து பலி ; அல்லைப்பிட்டியில் சம்பவம்
அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்குச் சென்றுள்ளார். இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்.
அவ்வேளை அவரது உடலில் பரவியிருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது.
இதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டிருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது.
இந்நிலையில் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அயலவர்கள் கூடி தீயை அணைத்து இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அதில் கணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். மனைவி தீக்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரின் தாக்குதலுக்கு இலக்கான அவரது சகோதரனும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போதையில் பெற்றோலை உடலில் ஊற்றிய குடும்பஸ்தர் தீயில் எரிந்து பலி ; அல்லைப்பிட்டியில் சம்பவம்
Reviewed by Author
on
September 20, 2021
Rating:

No comments:
Post a Comment