2020 (சா/த) பரீட்சை : அழகியல் பாட பெறுபேறு இன்றி உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்லலாம்
க.பொ.த சாதாணர தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்ட போதிலும் கொவிட்-19 தொற்று காரணமாக அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் நிறுத்தப்பட்டன.
அழகியல் பாடங்களுக்கு அமர்ந்து இரு திறமைச் சித்திகள் உட்பட 5 பாடங்களில் சித்தி பெற்று 1 முதல் 3 வரையான திறன் மட்டம் கொண்ட மாணவர்கள் உயர்தர வகுப்புகளுக்குச் செல்ல முடியும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டார்.
2020 சாதாரண தர பரீட்சையில் சுமார் 170,000 மாணவர்கள் அழகியல் பாடங்களுக்கு அமர்ந்துள்ளனர். பாடசாலைகள் திறந்தவுடன் இந்தப் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
2020 (சா/த) பரீட்சை : அழகியல் பாட பெறுபேறு இன்றி உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்லலாம்
Reviewed by Author
on
September 24, 2021
Rating:
Reviewed by Author
on
September 24, 2021
Rating:


No comments:
Post a Comment