பல மாதங்களாக பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத நிலையில் இழுத்து மூடும் நிலையில் பிரபல தொலைக்காட்சி.
மேலும் குறித்த ஊடக வலையமைப்பின் யாழ் அலுவலகத்தில் கடமையாற்றிய முக்கிய பணியாளர்களுக்கு சுமார் 3 மாத ஊதியம் வழங்கப்படாமையால் குறித்த பணியாளர்களும் விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பணியாளர்களுக்கு (ETP,EPF) ஆகியவை கடந்த மூன்று வருடங்களாக செலுத்தப்படவில்லை எனவும்,குறித்த பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட பணியாளர்கள் குறித்த தொலைக்காட்சி வலையமைப்பின் நிர்வாகத்திற்கு எதிராக யாழ் ஊழியர் சேமலாப நிதியத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் குறித்த தொலைக்காட்சி வலையமைப்பின் மாவட்ட செய்தியாளர்களாக கடமையாற்றிய அனைவருக்கும் சுமார் 5 மாத கால சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் தெரிய வருகிறது.
பல மாதங்களாக பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத நிலையில் இழுத்து மூடும் நிலையில் பிரபல தொலைக்காட்சி.
Reviewed by Author
on
October 29, 2021
Rating:

No comments:
Post a Comment