அண்மைய செய்திகள்

recent
-

ரூ. 10,000 சம்பள உயர்விற்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

அரச துறையின் மாதாந்த சம்பளத்தை 10,000 ரூபாவால் அதிகரிக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க சம்மேளனம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூட்டமைப்பின் செயலாளரான அஜித் கே திலகரத்ன தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் சம்பள அதிகரிப்பு அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார். 10,000 ரூபாவை அடிப்படை சம்பளத்தில் சேர்க்காமல் ஏனைய கொடுப்பனவாக வழங்குமாறு அவர் தெரிவித்ததுடன், இதனை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்த்தால், அது மேலதிக நேரம் மற்றும் போனஸ் போன்ற பிற சலுகைகளைப் பாதிக்கும் என்றார். மேற்படி சம்பள அதிகரிப்பை வழங்காவிட்டால், அது ஒட்டுமொத்த அரச துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் கூட்டமைப்பின் செயலாளர் எச்சரித்துள்ளார்.

ரூ. 10,000 சம்பள உயர்விற்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை! Reviewed by Author on November 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.