மன்னாரில் தொடர் மழை-மாவட்ட அரசாங்க அதிபர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம்.
மழைநீர் தமது வீட்டிற்குள் புகுந்த நிலையில் குறித்த குடும்பங்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
குறித்த பகுதி மிகவும் தாழ்வான பிரதேசம் என்பதால் மழை வெள்ள நீரை வெளியேற்றுவதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை(5) மதியம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. ஸ்ரன்லி டிமெல் தலைமையில்,மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் மற்றும் கிராம சேவையாளர் உள்ளிட்ட கிராம மக்களின் பிரதிநிதிகள் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் தேங்கி உள்ள வெள்ள நீரை நாளைய தினம் சனிக்கிழமை (6) வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை கிராம மக்களுடன் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தொடர் மழை-மாவட்ட அரசாங்க அதிபர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம்.
Reviewed by Author
on
November 05, 2021
Rating:
No comments:
Post a Comment