அண்மைய செய்திகள்

recent
-

மீரிகமை - குருணாகல் மத்திய அதிவேக நெடுஞ்சாலை 2ஆம் கட்டம் ஜனவரி 15 இல் திறப்பு

மீரிகமை முதல் குருணாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படுமென, பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.  

மீரிகமை முதல் குருணாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் நீளம் 40.91 கி.மீ. என்பதுடன், இதற்காக ரூபா 137 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

 சூழல் மற்றும் சமூக ரீதியான பாதிப்பு குறைவானதாக இருக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை நகர்ப்புற பிரதேசங்களைத் தவிர்த்து, பிரதானமாக வெற்று காணிகள் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  வழிப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீரிகமைவிலிருந்து குருணாகல் வரையிலான இவ்வீதி, தற்போது இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வீதியானது, உள்ளூர் ஒப்பந்ததாரர்களால் உள்நாட்டு நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.

  ஐந்து பாதை இடைமாற்றங்களைக் கொண்டுள்ள இந்த அதிவேக நெடுஞ்சாலை, மீரிகமை, நாகலகமுவ, தம்பொக்க, குருணாகல், யக்கபிட்டிய ஆகிய இடங்களில் கட்டணத்தை செலுத்தும் இடங்களைக் கொண்டுள்ளது. 




மீரிகமை - குருணாகல் மத்திய அதிவேக நெடுஞ்சாலை 2ஆம் கட்டம் ஜனவரி 15 இல் திறப்பு Reviewed by Author on December 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.