மொனராகலையில் கோர விபத்து: வயோதிபப் பெண் உயிரிழப்பு – அறுவர் காயம்!
இதையடுத்து படுகாயமடைந்த ஆறு பேரும் தனமல்விலை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் வேனொன்றில் மிந்தெனியவில் இடம்பெற்ற மரணக்கிரியை ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் மீண்டும் வீடு திரும்புகையிலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரே வேனை செலுத்தியுள்ளார் என்றும் இவர்களது இரு மகள்கள் மற்றும் மூன்றுப் பேரப்பிளைகள் ஆகியோரே மரணக் கிரியைகளில் கலந்துகொண்டு திரும்பியவர்களென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தனமல்விலைப் பொலிஸார் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மொனராகலையில் கோர விபத்து: வயோதிபப் பெண் உயிரிழப்பு – அறுவர் காயம்!
Reviewed by Author
on
January 26, 2022
Rating:

No comments:
Post a Comment