அண்மைய செய்திகள்

recent
-

பயன்படுத்தப்படாத 3 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில்

பயன்படுத்தப்படாத 3 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளன என இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜி. வீரசிங்க தெரிவித்துள்ளார். 26 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளில் 23 மில்லியன் டோஸ்கள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளன ஏஞ்சியுள்ளவை காலாவதியான பின்னர் அகற்றப்படும் நிலையில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். 

இன்னமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களிற்கு அவற்றை செலுத்துமாறு நாங்கள் சுகாதார அமைச்சினை கேட்டுக்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிடத்தக்க அளவு பைசர் தடுப்பூசிகளும் இன்னமும் செலுத்தப்படாத நிலையில் உள்ளன இது மிகவும் கவலைக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.


பயன்படுத்தப்படாத 3 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் Reviewed by Author on January 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.