அண்மைய செய்திகள்

recent
-

அரசாங்கம் சர்வதேச கொள்கை இல்லாது செயற்படுகின்றது- பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன.

அரசாங்கம் தற்போது சர்வதேச கொள்கை இல்லாது செயற்படுகின்றது.என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் நேற்று (6) கொழும்பில் வைத்து மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,, இவர்களிடம் சர்வதேச கொள்கையும் இல்லை, அவர்களுக்கென்று ஒரு தனியான கொள்கையும் இல்லை. அரசாங்கம் சீனாவின் பின்னால் செல்லும் போது ஏனைய அரசியல் தரப்பினர் மகிழ்ச்சியாக இல்லை. 

 அவர்களை திருப்திப்படுத்தவே சில செயற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. தற்போது இலங்கை கடற்படையினர் ஜப்பானுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஜப்பான் , இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஒரே கொள்கையில் செயற்படுகின்றனர். ஆனால் சீனா வேறுக் கொள்கையில் உள்ளவர்கள். எனவே அரசாங்கம் உண்மையில் இரு தரப்பையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கின்றது.என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனராத்ன மேலும் தெரிவித்தார்.


அரசாங்கம் சர்வதேச கொள்கை இல்லாது செயற்படுகின்றது- பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன. Reviewed by Author on January 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.