அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் 60ற்கு மேற்பட்ட பயிலுனர்களுக்கு NVQ தர சான்றிதழ் வழங்கி வைப்பு

60ற்கு மேற்பட்ட பயிலுனர்களுக்கு NVQ தர சான்றிதழ் வழங்கி வைப்பு முல்லைத்தீவு மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை (நயிற்றா)அலுவலகமும் வேல்விஷன் லங்கா நிறுவன ஒருங்கிணைப்பிலும் RPL முறமை மூலம் பயிலுனர்களுக்கான கட்டிட துறை மேசன் கட்டிட துறை, தச்சன், நீர்க்குழாய் பொருத்துனர், மின்னியல், மின் ஒட்டுனர் துறைகளுக்கான பரீட்சைகள் நடைபெற்று இவர்களுக்கான NVQ தர சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன 

 16.03.2022 அன்று பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை (நயிற்றா) முகாமையாளர் சி. சிவசண்முகமூர்த்தி தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை (நயிற்றா) அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் வேள்விஷன் லங்கா ஒருங்கிணைப்பாளர் ஜெனற்ராஜ் முல்லைத்தீவு மாவட்ட மின் அத்தியட்சர் S. சயந்தன் இலங்கை போக்குவரத்து சபையின் சாலை முகாமையாளர் T. புதுமைவேலன் வித்தியானந்தாக் கல்லூரியின் அதிபர் S. பாலச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சித்தியடைந்த 60 ற்கு மேற்பட்ட பயிலுனர்களுக்குமான NVQ தர சான்றிதழை வழங்கி வைத்தனர் 
















முல்லைத்தீவில் 60ற்கு மேற்பட்ட பயிலுனர்களுக்கு NVQ தர சான்றிதழ் வழங்கி வைப்பு Reviewed by Author on March 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.