மன்னாரில் எரிபொருள் இன்மையால் மீன்பிடி மற்றும் கருவாடு உற்பத்தி பாதிப்பு.
மீன்பிடி இன்மையால் மீன்களின் விலை அதிகரித்துள்ளமையினால் கருவாடு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கருவாடுகளின் விலைகளும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மக்கள் தற்போது கருவாடுகளை கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை நிலவி வருகின்றது.
கடந்த மாதம் 900 ரூபா விற்பனை செய்யப்பட்ட நெத்தலி கருவாடு தற்போது 1150 ரூபாயாகவும், கடந்த மாதம் 1100 ரூபா விற்பனை செய்யப்பட்ட கட்டா கருவாடு 1350 ரூபாயாகவும் விலை அதிகரித்து காணப்படுவதோடு,ஏனைய வகை கருவாடுகள் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் எரிபொருள் இன்மையால் மீன்பிடி மற்றும் கருவாடு உற்பத்தி பாதிப்பு.
Reviewed by Author
on
March 29, 2022
Rating:
Reviewed by Author
on
March 29, 2022
Rating:






No comments:
Post a Comment