அண்மைய செய்திகள்

recent
-

டொலர் இன்மையால் 4 நாட்களாக காத்திருக்கும் எண்ணெய்க் கப்பல்

டீசல் மற்றும் விமான எரிபொருளை ஏற்றி வந்த கப்பல் ஒன்று அவற்றை விடுவிக்க முடியாமல் நான்கு நாட்களாக இலங்கை கடற்பரப்பில் தரித்து நிற்கிறது. இரண்டு எரிபொருட்களும் 20,000 மெட்ரிக் தொன் கொண்டதாக கப்பலில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 எண்ணெய் பங்குகளை வெளியிடுவதற்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் டொலரைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அவர் கூறினார். கப்பல் நிறுத்தம் காரணமாக ஒரு நாளைக்கு 19,000 டொலர் தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும், டொலர் தாமதத்தால் மேலும் தாமதம் ஏற்பட்டால் பெரும் தொகை செலுத்த நேரிடும் என்றும் அவர் கூறினார்.


டொலர் இன்மையால் 4 நாட்களாக காத்திருக்கும் எண்ணெய்க் கப்பல் Reviewed by Author on March 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.