இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை சிங்கள மீனவர்கள் 6 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
அந்த படகில் இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் இருந்தனர். உடனடியாக 6 மீனவர்களையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த படகின் மாஸ்டர் சதுரங்க, அந்தோணி படுகே பசிந்து நிம்சன், புவாலு பசான்பண்டிகே ஒசன் மெளகா, பட்டியா கும்புர்கே ரவிக்ஷா அஞ்சனா, அவிக்க்ஷா தில்சன், ரோசன் உள்ளிட்ட 6 பேரையும் தருவைகுளம் கடற்கரைக்கு கொண்டு வந்த கடலோர பாதுகாப்பு படையினர் அவர்களை கொரோனா பரிசோதனைக்காக தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து பிடிப்பட்ட மீனவர்களை மெரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த இலங்கை மீனவர்களிடம் கியூ பிரிவு போலீசார் சுங்கத் துறையினர் மீன்வளத் துறையினர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு 6 மீனவா்களும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என காவல்துறையினர் தெரிவித்தனா்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை சிங்கள மீனவர்கள் 6 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
Reviewed by Author
on
March 18, 2022
Rating:
No comments:
Post a Comment