அண்மைய செய்திகள்

recent
-

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை சிங்கள மீனவர்கள் 6 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர், ரோந்து கப்பல் மூலம் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கடந்த வாரம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா என்ற ரோந்து கப்பல் கன்னியாகுமரி கடற்கரைக்கு தெற்கே 180 நாட்டிகல் மைல் தொலைவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 37 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் சந்தேகமான வகையில் ஒரு மீன்பிடிப் படகு மீன்பிடித்துக் கொண்டிருந்ததை கடலோர காவல் படையினர் கண்டு பிடித்தனர். உடனடியாக கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்தனர். 

அந்த படகில் இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் இருந்தனர். உடனடியாக 6 மீனவர்களையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த படகின் மாஸ்டர் சதுரங்க, அந்தோணி படுகே பசிந்து நிம்சன், புவாலு பசான்பண்டிகே ஒசன் மெளகா, பட்டியா கும்புர்கே ரவிக்‌ஷா அஞ்சனா, அவிக்க்ஷா தில்சன், ரோசன் உள்ளிட்ட 6 பேரையும் தருவைகுளம் கடற்கரைக்கு கொண்டு வந்த கடலோர பாதுகாப்பு படையினர் அவர்களை கொரோனா பரிசோதனைக்காக தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 

இதனை தொடர்ந்து பிடிப்பட்ட மீனவர்களை மெரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து இந்த இலங்கை மீனவர்களிடம் கியூ பிரிவு போலீசார் சுங்கத் துறையினர் மீன்வளத் துறையினர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு 6 மீனவா்களும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என காவல்துறையினர் தெரிவித்தனா்.






இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை சிங்கள மீனவர்கள் 6 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர். Reviewed by Author on March 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.