அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட செயலகத்தில் சர்வமத தலைவர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்துடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று(27) புதன் கிழமை மாலை 5 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நோன்பு திறக்கும் நிகழ்வில் சர்வமத தலைவர்கள், வட மாகாணத்தின் பிரதம செயலாளர், மன்னார் மாவட்ட செயலாளர், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி,பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள், மதத்தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். -இதன் போது சர்வ மத தலைவர்களின் ஆசிச் செய்தி வழங்கப்பட்டது. மேலும் நோன்பு திறக்கும் நிகழ்வு இடம் பெற்றதோடு,தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















மன்னார் மாவட்ட செயலகத்தில் சர்வமத தலைவர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற இப்தார் நிகழ்வு Reviewed by Author on April 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.