மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்பட்டுள்ளது-
அதற்கமைய, இந்த விடயம் தொடர்பான மேலதிக அறிக்கைகளை தயார் செய்ய மூன்று வாரங்கள் அவசியம் என மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைக்கு அமைய, மனிதப் புதைகுழி வழக்கை எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை மன்னார் நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
இதனிடையே, மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய , வவுனியா மேல் நீதிமன்றத்தில், மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவுள்ளது.
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்பட்டுள்ளது-
Reviewed by Author
on
April 26, 2022
Rating:
Reviewed by Author
on
April 26, 2022
Rating:



No comments:
Post a Comment