அண்மைய செய்திகள்

recent
-

சமூக நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்!

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின்(ONUR) நிதி அனுசரணையுடன் மாவட்ட செயலக கிராமிய நிர்வாகக் கிளையினரின் ஏற்பாட்டில் சமூக நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் 05.04.2022 அன்று முள்ளியவளை பாரதி சிறுவர் இல்ல மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

 இதில் முள்ளியவளை பாரதி சிறுவர் இல்லத்தினை சேர்ந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மற்றும் தோற்றவிருக்கின்ற முப்பது மாணவர்கள் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் வளவாளர்களாக மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ந.இளங்கீரன் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் தெ.துஷ்யந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.




சமூக நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்! Reviewed by Author on April 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.