அண்மைய செய்திகள்

recent
-

காலிமுகத்திடலில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் – 7ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்!

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 7 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப்பலகையைக் காட்சிப்படுத்தியுள்ள போராட்டக்காரர்கள் அங்கு கூடாரங்களை அமைதது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தமிழ்இ சிங்கள புதுவருடப்பிறப்பான நேற்றையதினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பு காலிமுகத்திடலுக்கு வருகை தந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ரபான் அடித்து மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு வெவ்வேறு விதங்களிலும் அரசாங்கத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினர்.



காலிமுகத்திடலில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் – 7ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்! Reviewed by Author on April 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.