தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் நன்றிகள்-பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்!
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராம சேவையாளர் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு வழங்கிவைத்துள்ளார்கள்
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 7ஆயிரத்தி 529 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதனை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் மக்களின் வறுமையினை உணர்ந்து காலத்தின் தேவையறிந்து செய்த இந்த அரிய உதவிக்கு எல்லோருக்கும் நன்றி பாராட்டுகின்றோம் என்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் நன்றிகள்-பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்!
Reviewed by Author
on
May 31, 2022
Rating:

No comments:
Post a Comment