முல்லைத்தீவில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 3582 மாணவர்கள் தகுதி : 33 நிலையங்களில் பரீட்சை
இதில் தனிப்பட்ட பரீட்சாத்திகள் 727 பேரும், பாடசாலை பரீட்சாத்திகள் 2855 பேரும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
முல்லை கல்வி வலயத்தில் தனிப்பட்ட பரீட்சாத்திகள் 571 பேரும், பாடசாலைப் பரீட்சாத்திகள் 2020 பேரும் பரீட்சைக்கு தோற்றுவதுடன் துணுக்காய் கல்வி வலயத்தில் தனிப்பட்ட பரீட்சாத்திகள் 156 பேரும் பாடசாலைப் பரீட்சாத்திகள் 835 பேரும் பரீட்சைக்கு தோற்றுகின்றார்கள்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் தடைகள் இன்றி மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
முல்லைத்தீவில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 3582 மாணவர்கள் தகுதி : 33 நிலையங்களில் பரீட்சை
Reviewed by Author
on
May 26, 2022
Rating:
Reviewed by Author
on
May 26, 2022
Rating:





No comments:
Post a Comment