50 ஆயிரம் யூரோக்களுடன் நபர் ஒருவர் கைது
பொரளையில் வசிக்கும் 53 வயதுடைய சந்தேக நபர், பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடி படை தெரிவித்துள்ளது.
குறித்த வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி சுமார் 18.69 மில்லியன் இலங்கை ரூபாவாகும் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக அவர் கிருலப்பனை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு நாணய தட்டுப்பாட்டுக்கு காரணமான உண்டியல் முறையானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பாக நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப்படையினர் சோதனைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
50 ஆயிரம் யூரோக்களுடன் நபர் ஒருவர் கைது
Reviewed by Author
on
May 16, 2022
Rating:

No comments:
Post a Comment