மன்னாரில் இடம்பெற்ற வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான விசேட செயலமர்வு
தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் இலங்கை கெல்விட்டாஸ்க் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையில் மாவட்ட ரீதியில் உள்ள இளைஞர்கள்,சர்வமத குழு உறுப்பினர்கள்,அரச உத்தியோகஸ்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களை உள்ளடக்கி மேற்படி செயலமர்வு இடம் பெற்றது.
பிரதேச ரீதியாக ஏற்படும் பிரிவினைகள், வன்முறை தீவிரவாத செயற்பாடுகளை நோக்கி நகர்வதை தடுக்கும் நோக்கிலும், பிரதேச மற்றும் மாவட்ட ரீதியில் இயங்கி வரும் சிவில் சமூக குழுக்களின் தீவிரவாதத்திற்கு எதிரான செயல் திறன்களை மேம்படுத்தும் விதமாக குறித்த செயலமர்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.
குறித்த செயல் திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இலங்கையில் இன ரீதியான முரண்பாடுகள் அதிகம் காணப்படும் ஆறு மாவட்டங்கள் உள்வாங்கப்பட்டு அப் பகுதிகளில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இடம்பெற்ற வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான விசேட செயலமர்வு
Reviewed by Author
on
May 22, 2022
Rating:

No comments:
Post a Comment