அண்மைய செய்திகள்

recent
-

O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

பரீட்சையின் போது சகோதரனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி பொது சாதாரண தர பரீட்சை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் அம்பாறை – கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தனிப்பட்ட பரீட்சார்த்தி தூர இடமொன்றில் இருந்து வருகை தந்துள்ளதுடன், சமயபாட பரீட்சையை சகோதரனுக்கு பதிலாக எழுதியதுடன் தனது அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றியுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. 

 அத்துடன் இச்சம்பவத்தில் ஒரு முக தோற்றமுடைய இரண்டு சகோதரர்களும் தத்தமது அடையாள அட்டையில் மாற்றம் செய்து இந்த ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் 32 வயதுடைய தனது சகோதரனுக்கு பதிலாக 28 வயதுடைய தம்பி முறையான சகோதரனே இவ்வாறு பரீட்சை எழுதி சிக்கியுள்ளார். மேலும் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் இரண்டு நாட்கள் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்! Reviewed by Author on May 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.