பிரதமர் நாட்டுமக்களுக்கு இன்று விசேட உரை..!
அத்துடன், அத்தியாவசிய உணவு, மருந்து, உரம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகிய செயற்பாடுகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் நெருக்கடி நிலைமையை வெற்றி கொள்வது தொடர்பில் சர்வதேச நாடுகளுடனான கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் தீர்மானமிக்க ச ரியான நடவடிக்கைகளை உரிய அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதன் மூலம் நாட்டை நிலையான தன்மைக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் நாட்டுமக்களுக்கு இன்று விசேட உரை..!
Reviewed by Author
on
May 16, 2022
Rating:

No comments:
Post a Comment