அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு குறித்து ரணில் கருத்து!

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து உத்தேச வேலைத்திட்டத்தை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (திங்கட்கிழமை) சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

 இந்நிலையில், இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக தனது ருவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தேச வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கும் நம்புவதாக அவர் கூறியுள்ளார். இம்மாதம் 30ஆம் திகதி வரை இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு குறித்து ரணில் கருத்து! Reviewed by Author on June 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.