அண்மைய செய்திகள்

recent
-

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல்

 வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 


நாளை (11) பி.ப. 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாட்டின் ஊடாக தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, மேலதிகமாகக் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் Reviewed by Vijithan on June 10, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.