சேமித்து வைத்த பெற்றோல் கொள்கலன் தீப்பற்றி திருமலையில் பெண் ஒருவர் அகால மரணம்
அண்மையில் கொழும்பு, கஹதொட்டுவ பகுதியில் இதே போன்று பெற்றோல் சேமித்து வைத்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒரு குடும்பமே வீட்டோடு தீ பற்றி எரிந்தது.
கணவன், மனைவி அந்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இன்று காலை அவர்களது ஒன்பது வயது மகள் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார். 19 வயதான மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எரிபொருட்களை சேமித்து வைப்பதனால் பாரிய இழப்புகள் ஏற்படும் என்பதனை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதன் காரணமாகவே அதற்கான பாதுகாப்புடன் வியாபாரம் செய்யப்படுகிறது. வீடுகள் மற்றும் பிற இடங்களில் எரிபொருள் சேமிப்புக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.
சேமித்து வைத்த பெற்றோல் கொள்கலன் தீப்பற்றி திருமலையில் பெண் ஒருவர் அகால மரணம்
Reviewed by Author
on
June 29, 2022
Rating:

No comments:
Post a Comment