எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகனை தாக்கிய இராணுவ அதிகாரி அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்!
5 பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தின் பரிந்துரைகள் வரும் வரை, குற்றம் சாட்டப்பட்ட ராணுவ அதிகாரி அனைத்துப் பணிகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை உதைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் கடந்த திங்கட்கிழமை குறித்த சிரேஷ்ட அதிகாரியின் நடத்தை தொடர்பான பிரச்சினையை ஆராய்ந்து அதன் பரிந்துரைகளை வழங்குவதற்காக பிரிகேட் கொமாண்டர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகனை தாக்கிய இராணுவ அதிகாரி அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்!
Reviewed by Author
on
July 06, 2022
Rating:
Reviewed by Author
on
July 06, 2022
Rating:


No comments:
Post a Comment