அண்மைய செய்திகள்

recent
-

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே எதிர்வரும் 21ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பெர்னாண்டோ இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதுவரை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர பதிவு நடவடிக்கை நிறைவு பெறும் வரை புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, தேசிய இளைஞர் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் விவகார அணி ஆகியன தேசிய எரிபொருள் பாஸ் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளது. வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதற்கமைய கிராமபுறங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தன்னார்வ சேவை ஊடாக பதிவு செய்வதன் மூலம் பொது மக்களுக்கு உதவுவதற்கு முன் வந்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும்! Reviewed by Author on July 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.