வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாட்கள் வேலை திட்டம் நாளை மன்னாரில்
இவ் 100 நாள் வேலைத்திடம் தொடர்பாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இன்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியீடு செய்துள்ளனர்
குறித்த ஊடக அறிக்கையில் தமிழர் தாயக பகுதிகளில் உள்ள அணைத்து
மக்களாலும், சிவில் அமைப்புக்களாலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் மாறுபட்ட வடிவங்களில் கவனயீர்ப்பு ஜனநாயகப் போராட்டங்கள், ஒன்று கூடல்கள், ஊடக சந்திப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனவும் பல சவால்களுக்கு மத்தியில் இவ் 100 நாள் செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் இந்த 100 நாள் நிகழ்விலும் ஊடகவியலாளர்கள் அனைவரும் முழுமையாக பங்கேற்று
உரிய வகையில் ஊடகங்கள் ஊடாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக தமது நியாயமான கோரிக்கைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று ஊடக அறிக்கையின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்கள்
அதே நேரம் தங்கள் தங்கள் மாவட்டத்தில் போராட்டங்கள் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம் பெறும் போது பொது மக்களும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்
வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள 08 மாவட்டங்களிலும் சுழற்சி
முறையில் பொதுமக்கள், கிராம மட்ட அமைப்புக்கள் அமைப்புகள்,விவசாயிகள், மீனவ
சங்ககள்,பெண்கள் அமைப்புகள் மாணவ அமைப்புகள்,சிவில் அமைப்புகள் ஆகியோறும் இணைக்கப்பட்டு குறித்த 100 நாள் செயற்திட்டம்
மேற்கொள்ளப்படவிருக்கின்றது
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாட்கள் வேலை திட்டம் நாளை மன்னாரில்
Reviewed by Author
on
July 31, 2022
Rating:

No comments:
Post a Comment