அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாட்கள் வேலை திட்டம் நாளை மன்னாரில்

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மக்கள் சந்திப்பு ஊடக சந்திப்பு என்று பலவிதமான வேலை திட்டங்கள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 100 நாட்கள் நடைபெற உள்ளது இந்த செயல்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மன்னர் நகர சபை பஸார் பகுதியில் நாளைய தினம் திங்கட்கிழமை (1/8/2022) 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட உள்ளது

 இவ் 100 நாள் வேலைத்திடம் தொடர்பாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இன்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியீடு செய்துள்ளனர் குறித்த ஊடக அறிக்கையில் தமிழர் தாயக பகுதிகளில் உள்ள அணைத்து மக்களாலும், சிவில் அமைப்புக்களாலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் மாறுபட்ட வடிவங்களில் கவனயீர்ப்பு ஜனநாயகப் போராட்டங்கள், ஒன்று கூடல்கள், ஊடக சந்திப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனவும் பல சவால்களுக்கு மத்தியில் இவ் 100 நாள் செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் இந்த 100 நாள் நிகழ்விலும் ஊடகவியலாளர்கள் அனைவரும் முழுமையாக பங்கேற்று உரிய வகையில் ஊடகங்கள் ஊடாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக தமது நியாயமான கோரிக்கைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று ஊடக அறிக்கையின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்கள் 

அதே நேரம் தங்கள் தங்கள் மாவட்டத்தில் போராட்டங்கள் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம் பெறும் போது பொது மக்களும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள 08 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் பொதுமக்கள், கிராம மட்ட அமைப்புக்கள் அமைப்புகள்,விவசாயிகள், மீனவ சங்ககள்,பெண்கள் அமைப்புகள் மாணவ அமைப்புகள்,சிவில் அமைப்புகள் ஆகியோறும் இணைக்கப்பட்டு குறித்த 100 நாள் செயற்திட்டம் மேற்கொள்ளப்படவிருக்கின்றது





வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாட்கள் வேலை திட்டம் நாளை மன்னாரில் Reviewed by Author on July 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.