அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 77 பேர் கைது!

மட்டக்களப்பு களவங்கேணி கடல் பகுதில் இருந்து படகு மூலம் அவுஸ்ரோலியா பிரயாணித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு விசாரணைகளுக்காக கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இன்று அதிகாலை 2 மணியளவில் மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடல்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 அவுஸ்திரேலியா செல்வதற்கான படகில் ஏற, களுவங்கேணி கடற்கரையில் வேன் ஒன்றில் காத்திருந்த 17 பேரை கடற்படை புலனாய்வு பிரிவினர், பொலிஸாருடன் இணைந்து சுற்றிவழைத்து கைது செய்ததையடுத்தே ஏனைய 77 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து 14 இலட்சம் ரூபாவையும் வேன் ஒன்றையும் ஏறாவூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்வர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 77 பேர் கைது! Reviewed by Author on July 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.