அண்மைய செய்திகள்

recent
-

கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை

மத்துகம – போபிட்டிய பகுதியில் கூரிய ஆயுதங்களினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையமொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதங்களால் அதன் உரிமையாளரையும் மற்றுமொரு நபரையும் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது பலத்த காயங்களுக்குள்ளான வர்த்தக நிலையத்திற்குள்ளிருந்த நபர் உயிரிழந்துள்ளார். 

 படுகாயமடைந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வேத்தேவ வைத்தியசாலையில் இருந்து நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, குளியாப்பிட்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்த கத்தி, வாள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை Reviewed by Author on August 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.